Home இலங்கை பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் எாித்துக் கொலை

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் எாித்துக் கொலை

by admin

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் எாித்துக் கொலை செய்யப்பட்டுள்ளாா். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சியல்கோட்டில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக இருந்த இலங்கையா் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பின்னா் உயிருடன் எரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளாா்.

இந்தநிலையில் பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள இந்த நாள் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார். மேலும் கைது நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தான் விசாரணைகளை மேற்பார்வையிட்டு வருவதாகவும் இதற்கு காரணமானவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவா் தொிவித்துள்ளாா்

பெரும் எண்ணிக்கையிலான நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டு அவரது உடல் எரிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.


இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் அரசு உரிய விசாரணைகளை மேற்கொள்ளும் என எதிர்ப்பார்ப்பதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு தொிவித்துள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More