Home இலங்கை அரசாங்கம் சர்வதேச கொள்கை இல்லாது செயற்படுகின்றது

அரசாங்கம் சர்வதேச கொள்கை இல்லாது செயற்படுகின்றது

by admin

அரசாங்கம் தற்போது சர்வதேச கொள்கை இல்லாது செயற்படுகின்றது.என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளாா். கொழும்பில் நேற்று (6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவா் இதனைத் தொிவித்துள்ளாா்.


மேலும் அங்கு கருத்து தொிவித்த அவா் இவர்களிடம் சர்வதேச கொள்கையும் இல்லை, அவர்களுக்கென்று ஒரு தனியான  கொள்கையும் இல்லை.  அரசாங்கம் சீனாவின் பின்னால் செல்லும் போது ஏனைய அரசியல் தரப்பினர் மகிழ்ச்சியாக இல்லை. அவர்களை திருப்திப்படுத்தவே சில செயற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது.


 தற்போது இலங்கை கடற்படையினர் ஜப்பானுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஜப்பான் , இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஒரே கொள்கையில் செயற்படுகின்றனர்.


ஆனால் சீனா வேறுக் கொள்கையில் உள்ளவர்கள். எனவே அரசாங்கம் உண்மையில் இரு தரப்பையும் சமநிலைப்படுத்த முயற்சிக்கின்றது.என ராஜித சேனராத்ன தெரிவித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More