Home இலங்கை தனியாக நின்று ஆளமுடியாது SLFPஐ கறிவேப்பிலையாக தூக்கி வீசி விட்டனர்!

தனியாக நின்று ஆளமுடியாது SLFPஐ கறிவேப்பிலையாக தூக்கி வீசி விட்டனர்!

by admin

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள், தேர்தலுக்குப் பின்னர், தன்னுடைய உறுப்பினர்களை கறிவேப்பிள்ளையாக தூக்கியெறிந்து விட்டனர் எனக் குற்றச்சாட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் எவையும் இன்று வரையிலும் நிறைவேற்றப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்​தறை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், நாடே குழப்பத்துக்குள் சிக்கித் தவிக்கிறது எனவும், அம்மையார் காலத்தில் கூட இவ்வாறு உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அன்று வரிசையில் நின்றிருந்த மக்கள், தூசனங்களை ​பேசவில்லை. நாட்டை ஆட்சி செய்யவேண்டுமாயின் நல்ல குழுவொன்று இருக்கவேண்டுமெனத் தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, தனியாக நின்றுக்கொண்டு நாட்டை ஆட்சிசெய்யமுடியாது எனக் கூறியுள்ளார்.

அத்துடன் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி காலத்தை, சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக நீடித்துக்கொள்வதற்கு தயாராக வேண்டாமென தான் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More