Home இலங்கை கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தராக பேராசிரியர் கனகசிங்கம்!

கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தராக பேராசிரியர் கனகசிங்கம்!

by admin

உபவேந்தருக்கான தேர்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தெரிவுக்குழுவின் பிரகாரமும், கிழக்குப் பல்கலைக்கழக பேரவையின் தெரிவின் அடிப்படையிலும், முதல் நிலையில் தெரிவு செய்யப்பட்டு, மானியங்கள் ஆணைக் குழுவின் சிபார்சின் பிரகாரம், பேராசிரியர் கனகசிங்கம் அப்பதவிக்கு ஜனாதிபதியால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, கிரான்குளத்தினை சேர்ந்த, கிரான்குளத்தின் முதல் பேராசிரியர் என்ற பெருமையைப் பெற்ற பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம், முகாமைத்துவ துறையில் முதலாவது பேராசிரியராக தெரிவானதுடன், திருகோணமலை வளாக முதல்வராக ஆறு வருடங்கள் பதவியும் வகித்தவருமாவார்.

இவருடைய காலப் பகுதியிலேயே திருகோணமலை வளாகம் பாரிய வளர்ச்சி அடைந்தது. கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இவர் பீடாதிபதியாக கடமையாற்றிய காலப் பகுதியில் மட்டக்களப்பு சமூகவியலாளர், கல்வியாளர்கள் மற்றும் வர்த்தக அங்கத்தவர் உடன் இணைந்து செயற்பட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More