Home இலங்கை வல்வெட்டித்துறையில் இருந்து கடலுக்கு சென்ற இரு மீனவர்களை காணவில்லை

வல்வெட்டித்துறையில் இருந்து கடலுக்கு சென்ற இரு மீனவர்களை காணவில்லை

by admin

வல்வெட்டித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்களை காணவில்லை என வல்வெட்டித்துறை காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த சுந்தரலிங்கம் கெங்காதரன் (வயது 37) மற்றும் தவராசா சுதர்சன் (வயது 41) ஆகிய இரு மீனவர்களும் காணாமல் போயுள்ளனர். 

வல்வெட்டித்துறையில் இருந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை தொழிலுக்கு சென்ற மீனவர்களில் 40 குதிரை வலு கொண்ட படகில் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பவில்லை. 
காணாமல் போன இரு மீனவர்களையும் தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை காணாமல் போன மீனவர்களின் உறவினர்களால் வல்வெட்டித்துறை காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More