Home இலங்கை கடல் ஆய்வில் ஈடுபடும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் யாழில் திருட்டு

கடல் ஆய்வில் ஈடுபடும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் யாழில் திருட்டு

by admin

கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் சில குருநகர் கடற்பகுதியில் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
அமெரிக்க பிரஜை ஒருவர் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார், அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணத்திற்கு  கொழும்பில் இருந்து கடந்த 19ஆம் திகதி சிறிய படகொன்றில் வந்துள்ளார். 


படகில் யாழ்ப்பாணம் வந்தவர் குருநகர் கடற்பகுதியில் தனது படகினை நிறுத்தி விட்டு , தங்குவதற்காக யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றுள்ளார். 
விடுதியில் தங்கி விட்டு மறுநாள் படகுக்கு சென்ற போது , படகில் இருந்த சுழியோடி கண்ணாடிகள் , பாதுகாப்பு அங்கிகள் , கடல் ஆய்வு உபகரணங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதனை அவதானித்துள்ளார். 


அது தொடர்பில் அவர் யாழ்ப்பாண காவல்லையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More