Home இலங்கை யாழ்.பல்கலை மருத்துவபீட, போலி அடையாள அட்டையுடன் யுவதி கைது!

யாழ்.பல்கலை மருத்துவபீட, போலி அடையாள அட்டையுடன் யுவதி கைது!

by admin


யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட போலி அடையாள அட்டையுடன்
தங்கி இருந்த யுவதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையை
காண்பித்து , தான் மருத்துவ பீட மாணவி என கூறிதிருநெல்வேலி பகுதியில் வாடகை அறையில் தங்கி இருந்துள்ளார்.

அவரது நடவடிக்கைகள் நடத்தைகளில் வீட்டு உரிமையாளர் சந்தேகம்
அடைந்து ,, அது தொடர்பில் கோப்பாய் காவற்துறையினருக்கு
தகவல் வழங்கியுள்ளார்.

தகவலின் பிரகாரம் குறித்த வீட்டுக்கு சென்ற காவற்துறையினர்
வாடகை அறையில் தங்கி இருந்த யுவதியிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன் போது குறித்த யுவதி மருத்துவ பீட மாணவி அல்ல
என்பதனை கண்டறிந்தகாவற்துறையினர் , யுவதி காண்பித்த
மாணவி அடையாள அட்டையும்போலியானது என கண்டறிந்துள்ளனர்.

அதனை அடுத்து யுவதியை கைது செய்த காவற்துறையினர் ,
விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் யுவதியை முற்படுத்தியதை அடுத்து , நீதவான் யுவதியை 14நாட்களுக்குவிளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More