இலங்கை பிரதான செய்திகள்

காணிப்பிணக்கு காரணமாக மாற்றுத்திறனாளி ஒருவா் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணிப் பிணக்கு ஒன்றை காரணமாக வைத்து இடுப்புக்கு கீழே இயங்காத மாற்றுத்திறனாளி ஒருவா் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்தில் அவரது கால் முறிந்த நிலையில் யாழ்ப் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 05.03.2022 திகதி அன்று ஒட்டுசுட்டான் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட வித்தியாபுரம் பகுதியில்15 வருடமாக வசிக்கும் மாற்றுத்திறனாளியான கிறிஸ்துராசா என்பவரது வீட்டுக்கு சென்ற ஒரு குழுவினரே சக்கர நாற்காலியில் இருந்த குறித்த நபரை தாக்கி காலை அடித்து முறித்துள்ளதுடன் தாக்குதலை தடுக்க முற்பட்ட அவரது மனைவிமீதும் தாக்குதல் மேற்கொண்டதில் தலையில் காயமடைந்த நிலையில் அவருக்கு 18 இழை போடப்பட்டுள்ளது. அத்தோடு வீட்டில் இருந்த வயோதிபர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபருக்கும் அவரது உறவினருக்குமிடையில் இருந்த காணிப் பிணக்கு தீர்க்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட நபரின் சகோதரத்தின் பிள்ளைகள் சுமார் பத்துக்கும் மேற்ப்பட்டவர்களை அழைத்து வந்து இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகவும் தாக்குதல் நடத்த வந்தவர்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது

சம்பவ இடத்துக்கு சென்ற ஒட்டுசுட்டான் காவல்துறையினா் மூவரை கைது செய்து 06.03.2022 அன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலை படுத்திய நிலையில் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தாக்குதலுக்குள்ளான மாற்றுத்திறனாளி தன்னை தாக்கிய அனைவரும் கைது செய்யப்படவில்லை எனவும் கைது செய்யப்பட்டவர்களும் வெளியில் வந்துள்ளதனா தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உயிர் அச்சுறுத்தல் உள்ளது என ஊடகங்களுக்கு தொிவித்துள்ளாா்.“

தன்னை கொல்லாமல் விடமாட்டேன் எனவும் தன்னை கொன்ற பின் குடும்பத்தில் ஏனையவர்களையும் கொல்வோம். என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் கோாிக்கை விடுத்துள்ளாா்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.