Home இலங்கை அக்கரைப்பற்றில் மீன்பிடி வலையில் மனித சடலம் சிக்கியது!

அக்கரைப்பற்றில் மீன்பிடி வலையில் மனித சடலம் சிக்கியது!

by admin

அக்கரைப்பற்று – கடற்கரைப் பிரதேசத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் நபரொருவரின் சடலமொன்று நேற்று (29.03.22) மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று காவற்துறையினர் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தில் வழமை போன்று கரைவலை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே குறித்த சடலம் மீனவர்களின் வலையில் அகப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கரைவலை மீனவர்கள் தமது வலையினை கரைக்கு ஒதுக்கிக் கொண்டிருந்த போது சடலமொன்று வலைக்குள் இருப்பதை அறிந்த மீனவர்கள் சடலத்தினை கரைக்கு ஒதுக்கியுள்ளனர்.

கரையொதுக்கப்பட்ட சடலத்தின் கழுத்து மற்றும் தலைப் பகுதியில் இரத்தக்காயங்கள் இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இச்சடலம் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவருடையதாக இருக்கலாம் எனவும் கடலின் ஆழப் பகுதியில் இருந்து படிப்படியாக கரையொதுங்கிய போது தமது வலையில் அகப்பட்டிருக்கலாம் எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று காவற்துறையினர் மற்றும் அம்பாறை தடயவியல் பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More