Home இலங்கை போராட்டக்காரர்களை வீடியோ எடுத்தவாறு குழப்பத்தில் ஈடுபட்ட மூவர்

போராட்டக்காரர்களை வீடியோ எடுத்தவாறு குழப்பத்தில் ஈடுபட்ட மூவர்

by admin

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் யாழில் இடம்பெற்ற போராட்டத்தில் மூவரே குழப்பத்தினை ஏற்படுத்தி இருந்தனர்.  யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது , யாழ் .மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக தேசிய கொடி ஒன்றினை ஏந்தியவாறு வந்த மூவர்போராட்டத்தினை குழப்பும் கமாக கருத்துக்களை தெரிவித்தனர்.


அதேவேளை குறித்த மூவரில் ஒருவர் போராட்டக்காரர்களை தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்தவாறே குழப்பத்தில் ஈடுபட்டு இருந்ததனை அவதானிக்க முடிந்தது.  அதனால் , போராட்ட காரர்களுக்கும் அவர்களும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு , குழப்பங்கள் ஏற்பட்டன. 
போராட்டக்காரர்களுடன் குழப்பத்தில் ஈடுபட்ட மூவரும் பின்னர் காவல்துறையினரினால் அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More