நேற்றையதினம் (04) நியமிக்கப்பட்ட புதிய நிதியமைச்சர் அலிசப்ரி, தனது நிதியமைச்சர் பதவியிலிருந்து இன்று (05) விலகியுள்ளாா். அலி சப்ரி உட்பட 4பு திய அமைச்சரவை அமைச்சர்கள் நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவியேற்றிருந்த நிலையில் இன்று அலி சப்ரி பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.