Home இலங்கை இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதில் ரணில் முயற்சி?

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதில் ரணில் முயற்சி?

by admin

அரசாங்கம் – எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பல தரப்பினரால் முன்மொழியப்பட்டுள்ள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு ஐந்து பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரணில் விக்ரமசிங்க, நிமல் சிறிபால டி சில்வா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா – டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஐரோப்பிய இராஜதந்திரிகள் பலரை சந்தித்து, தற்போது நிலவும் பொருளாதார நிலைமை குறித்து, ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன்போது இடைக்கால அரசாங்கத்தின் தேவை – அதன் பதவிக்காலம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன் அடிப்படையில் 10 உறுப்பினர்களுக்கு மிகையாகாமல், சிரேஷ்ட மற்றும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய புதிய அரசாங்கத்தை உருவாக்கும் யோசனை குறித்தும் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுக்றிது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More