
மன்னார்- முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள், தமிழகத்தின் தஞ்சை பட்டுக்கோட்டை அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக கடலோர பாதுகாப்பு காவற்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை என செய்தி வெளியாகி உள்ளன..
இந்த இரு இளைஞர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபின் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment