சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் மற்றும் இலங்கையின் அபிவிருத்திக்காக இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்த இலங்கைக்கு முழுமையாக ஆதரவளிப்பதாக ஜப்பானிய தூதுவர் ஹிதேகி மிசுகோஷி தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் நடைபெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடனான கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையுடனான பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியிலான உறவுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதாகவும் அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.