Home இந்தியா தமிழகத்துள் நுழையும் இலங்கை அகதிகளை மீட்க தனுஷ்கோடியில் படகுகளை நிறுத்த கோரிக்கை!

தமிழகத்துள் நுழையும் இலங்கை அகதிகளை மீட்க தனுஷ்கோடியில் படகுகளை நிறுத்த கோரிக்கை!

by admin

இலங்கையிலிருந்து தமிழகத்துள் பிரவேசிக்கும் அகதிகளை மீட்க தனுஷ்கோடியில் கரையோர காவற்துறையினரின் ரோந்துப் படகுகளை நிறுத்த வேண்டும் என இந்திய மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியினால் அகதிகளாக வரும் பெரும்பாலானோர் தனுஷ்கோடி அருகே உள்ள மணல் தீடைகளில் இறங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரையோர காவற்துறையினருக்கு சொந்தமான படகுகள் தனுஷ்கோடியில் ரோந்து செல்லவும் இலங்கையிலிருந்து வரும் அகதிகளை மீட்கவும் தனுஷ்கோடி படகுகள் இறங்குதளத்தில் நிறுத்தப்பட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் இந்தியாவில் தஞ்சமடைபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்த வண்ணமுள்ளம குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More