Home இலங்கை GRக்கு MY3 – 24 மணி நேர காலக்கெடு!

GRக்கு MY3 – 24 மணி நேர காலக்கெடு!

by admin

மக்களின் போராட்டத்திற்கு பணிந்து பிரதமரும் ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

24 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனவும், பிரதமரும் பதவி விலக வேண்டும் எனவும், அதன் பின்னர் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க அனைத்துக் கட்சிகளையும் அழைக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை நீதிக்காக போராடும் மக்களே ஆக்கிரமித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் என்பதே தமது ஒரே கோரிக்கை எனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அந்த பதவியை வகிக்க ஆணை இல்லாததால் அதனை செய்ய வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனவே, ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக தமது பதவிகளை இராஜினாமா செய்வதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சர்வகட்சி அரசாங்கம் உடனடியாக செயற்பட வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தாகும் என அவர் குறிப்பிடுகின்றார்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More