Home இலங்கை சஜித் விலகினார் – டலசை முன்மொழிந்தார்!

சஜித் விலகினார் – டலசை முன்மொழிந்தார்!

by admin

ஜனாதிபதி தெரிவுக்கான போட்டியிலிருந்து எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விலகியுள்ளார். இதற்கமைய  ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக தனது டுவிட்டர் பதிவில் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப் பெருமவை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தெரிவுக்கான ஜனாதிபதி வேட்பாளர்கள் மூவரின் பெயர்கள் இன்று நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டன. அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் பெயரை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிய, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அதனை வழிமொழிந்தார்.

அதேபோல் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் அமைச்சர் தினேஸ் குணவர்தணவால் முன்மொழியப்பட்டதுடன் அதனை அமைச்சர் மனுஷ நாணயக்கார வழிமொழிந்தார்.

மேலும் மற்றுமொரு வேட்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்கவின் பெயரை விஜித ஹேரத் முன்மொழிந்ததுடன்,அதனை ஹரினி அமரசூரிய வழிமொழிந்தார்.

இதேவேளை நாளை காலை 10 மணி வரை நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More