Home இலங்கை கோட்டாபய தாய்லாந்தில் தஞ்சம் அடைந்தார் – சிங்கப்பூர் போர் குற்றச்சாட்டை சுமத்த முற்பட்டதா?

கோட்டாபய தாய்லாந்தில் தஞ்சம் அடைந்தார் – சிங்கப்பூர் போர் குற்றச்சாட்டை சுமத்த முற்பட்டதா?

by admin

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தாய்லாந்தை சென்றடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பதற்காக இன்று (11.08.22) பாங்கொக்கை அடைந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விசா காலாவதியாகும் நிலையில் இன்று மாலை சிங்கப்பூரின் செலிடார் விமான நிலையத்திலிருந்து வாடகை விமானம் மூலம் பாங்கொக் நேரப்படி இரவு 8 மணியளவில் பாங்கொக்கின் டான் முயாங் விமான நிலையத்தில் தரையிறங்கியதாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இன்று அவரது விசா காலாவதியாகும் நிலையில் சிங்கப்பூர் சட்டமா அதிபர் அவருக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவிருந்தார் எனவும், அதனால் அவர் அங்கிருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More