ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட தானிஷ் அலி உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.