Home இலங்கை நல்லூர் கைலாச வாகன உற்சவமும் கஜவள்ளி மஹாவள்ளி உற்சவமும்

நல்லூர் கைலாச வாகன உற்சவமும் கஜவள்ளி மஹாவள்ளி உற்சவமும்

by admin

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான இன்றைய தினம் திங்கட்கிழமை காலை கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம் இடம்பெற்றது.

காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து மகர வாகனத்தில் கஜவல்லி மஹாவள்ளி எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். 

அதேவேளை இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை தங்க ரத உற்சவமும்  நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை மாம்பழத்திருவிழாவும் மாலை ஒருமுக திருவிழாவும் இடம்பெறவுள்ளது. 

அத்துடன் நாளை மறுதினம் புதன்கிழமை காலை 7மணிக்கு சித்திரத்தேர் வெள்ளோட்டமும், மாலை சப்பரத்திருவிழாவும்,  மறுநாள் வியாழக்கிழமை தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளது.

அதேவேளை 20ம் திருவிழாவான கைலாச வாகன உற்சவம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  மாலை இடம்பெற்றது.

மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து கைலாச வாகனத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி வலம் வந்தார்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More