Home இலங்கை மதுபோதையில் பயணிகள் பேருந்தை செலுத்திய இ.போ.ச சாரதி மானிப்பாயில் கைது!

மதுபோதையில் பயணிகள் பேருந்தை செலுத்திய இ.போ.ச சாரதி மானிப்பாயில் கைது!

by admin

மதுபோதையில் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மானிப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் காரைநகர் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை செலுத்திய சாரதி மது போதையில் காணப்பட்டுள்ளார். 

இது தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து ,மானிப்பாய் காவல்துறையினர் சண்டிலிப்பாய் கட்டுடை பகுதியில் குறித்த பேருந்தினை மறித்து சாரதியை பரிசோதித்துள்ளனர். 

அதன் போது சாரதி மது போதையில் இருந்தமையை உறுதி செய்ததை அடுத்து அவரை கைது செய்தனர்.  அதேவேளை பிறிதொரு சாரதியை வரவழைத்து பேருந்தினை அனுப்பி வைத்தனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More