Home இலங்கை லஹிருக்கெதிரான பிடியாணை நீக்கம் – மங்கள மத்துமகேக்கு பிணை

லஹிருக்கெதிரான பிடியாணை நீக்கம் – மங்கள மத்துமகேக்கு பிணை

by admin

வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் முன்னிலையாகாமையால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த, மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பினை சேர்ந்த லஹிரு வீரசேகர சட்டத்தரணிகள் ஊடாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையானாா்.

2017 ஆம் ஆண்டு கொழும்பு கோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றின் போது,  முறையற்ற விதத்தில் ஒன்றுகூடிய குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கில் முன்னிலையாமைக்காக அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவா் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையானதனைத் தொடா்ந்து அவருக்கெதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுவதாக கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே தொிவித்துள்ளாா்.

இதேவேளை, நீதிமன்ற உத்தரவை மீறி கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த புரட்சிகர மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் மங்கள மத்துமகே இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளாா்.

இன்றையதினம் கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளாா்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More