Home இலங்கை அனுமதிப்பத்திரத்தில் மோசடி – 8 சாரதிகள் கைது

அனுமதிப்பத்திரத்தில் மோசடி – 8 சாரதிகள் கைது

by admin

அனுமதிப் பத்திரங்களில்  மோசடி செய்து மணலேற்றிச் சென்ற எட்டு டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதுடன், அதன் சாரதிகள் எண்வரையும் காவல்துறையினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கண்டி வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனங்களை கைதடி பகுதியில் சாவகச்சேரி காவல்துறையினர் சோதனையிட்டபோதே இந்த மோசடி தெரிய வந்தது.

அதனை அடுத்து குறித்த டிப்பர் வாகனங்களை கைப்பற்றிய சாவகச்சேரி காவல்துறையினர் , அனுமதிப் பத்திரங்களில் மோசடி செய்த குற்றத்தில் சாரதிகளை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சாரதிகளையும், கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More