எல்லை தாண்டி மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை கைது செய்ததோடு அவர்கள் மீன் பிடியில் ஈடுபட்ட படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மார்க்ஸ் ஜூட் மாஸ்டர் , ஆண்டனி ஹேமா நிஷாந்தன் , இம்மானுவேல் நிக்சன் ,துருவந்தா ஸ்ரீலால், சுதீஷ் சியான் உள்ளிட்ட 5 இலங்கை மீனவர்களையே இவ்வாறு இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இலங்கை மீனவா்கள் விசாரணைக்காக தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2022/10/WhatsApp-Image-2022-10-16-at-3.10.02-PM-1024x480.jpeg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2022/10/WhatsApp-Image-2022-10-16-at-3.10.03-PM.jpeg)