Home இலங்கை யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1ம் நாள் உற்சவம்!

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1ம் நாள் உற்சவம்!

by admin

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1ம் நாள் உற்சவம் இன்றைய தினம் புதன் கிழமை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

நல்லூர் ஆலய சூழல் வீதிகள் மாலையில் ஒரு மணி நேரம் மூடப்படும்!

நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தஷஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நல்லைகந்தன் வெளி வீதியுலா வரும் வேளையில் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மாலை 5.00 மணி தொடக்கம் 6.00 மணி வரையிலும்,  சூரன்போர் திருவிழாவான 30ஆம் திகதி மதியம் 12 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரையிலும் 31ஆம் திகதி மாலை 5 மணி தொடக்கம் 6.00 மணி வரையும் நல்லூர் ஆலய சுற்றாடலில் பக்த்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகனம்கள் உள்நுழைய முடியாதவாறு பாதைகள் மூடப்பட்டிருக்கும்.  

இந் நேரங்களில் மாத்திரம் வாகனங்கள் ஆலயச் சுற்றாடலினைத் தவிர்த்து வழமையான மாற்றுப் பாதைகளூடாக பயணிக்க முடியும் என்றும் மாநகர முதல்வர் அறிவித்துள்ளர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More