Home இலங்கை மானிப்பாயில் இளைஞன் மீது காவல்துறையினா் , இராணுவம் , காவல்துறை அதிரடிப்படையினர் இணைந்து தாக்குதல்

மானிப்பாயில் இளைஞன் மீது காவல்துறையினா் , இராணுவம் , காவல்துறை அதிரடிப்படையினர் இணைந்து தாக்குதல்

by admin

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் தலைக்கவசம் அணியாது சென்ற இளைஞர்களை வழிமறித்து காவல்துறையினா்  ,இராணுவத்தினர் மற்றும் காவல்துறை  விசேட அதிரடி படையினர் ஆகியோர் இணைத்து மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.  தாக்குதலில் காயமடைந்த இளைஞனை வைத்தியசாலையில் அனுமதிக்காது ,காவல்துறையினா் கைது செய்து மானிப்பாய் காவல்நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

மானிப்பாய் ஆலடி சந்தியில் இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மானிப்பாய் ஆலடி சந்தியில் காவல்துறையினா் மற்றும் இராணுவத்தினர் கடமையில் இருந்த வேளை , வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களில் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் தலைக்கவசம் அணியாது இருந்துள்ளார். அவர்களை வழிமறித்து காவல்துறையினா்ர் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , ” தாம் தலைக்கவசம் அணியாதது தவறு தான், அதற்கு தண்டத்தை எழுதித் தாருங்கள், நேரமாகிவிட்டது” என கூறியுள்ளார்.
காவல்துறையினருடன் இளைஞர்கள் திருப்பி கதைத்ததும் காவல்துறையினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் போது , அருகில் இருந்த இராணுவத்தினர் இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் இராணுவத்தினர் எவ்வாறு தாக்கலாம் என வினாவி முரண்பட்ட போது , காவல்துறையினரும் இராணுவத்தினருடன் இணைந்து தாக்கியுள்ளனர்.
அதேநேரம் வீதியால் மோட்டார் சைக்கிள்களில் வந்த காவல்துறை  விசேட அதிரடி படையினரும் இறங்கி இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அதனை அடுத்து அங்கு பொதுமக்கள் கூடியதும் , காயமடைந்த இளைஞனை கைது செய்து மானிப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More