Home இலங்கை கொழும்பு துறைமுக நகரிற்கு, புதிய வீசா!

கொழும்பு துறைமுக நகரிற்கு, புதிய வீசா!

by admin

கொழும்பு துறைமுக நகரத்திற்கு, புதிய வீசா வகைகளை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவுவதற்குள்ள சர்வதேச வணிகம், கப்பற்றுறை நடவடிக்கைகள், நிதி, தகவல் தொழிநுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு சேவைகளுக்காக இலங்கைக்கு பயணிக்கவுள்ள  முதலீட்டார்கள் மற்றும் ஏனைய குறித்த தரப்பினர்களுக்கு வீசா வழங்கல்  பணிகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

இதற்கமைய, கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய வீசா வகைகளை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையில் புதிய உத்தேச வீசா வகைகள்  வரையறுக்கப்பட்டுள்ளன.

1.வதிவிட வீசா வகையின் கீழ் முதலீட்டாளர்களுக்கான “முதலீட்டாளர் வீசா” வகை

2.சேவை வழங்குநர்களுக்கான “சேவை வழங்குநர் வீசா” வகை

3.கொழும்பு துறைமுக நகரத்தில் குத்தகை அடிப்படையில் வசிக்கின்ற வெளிநாட்டவர்களுக்கான “சீபிசீ வதிவிட சொத்து குத்தகையாளர்” வீசா வகை எ 3 வகையான விசாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More