Home இலங்கை யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் , அங்கஜனுடன் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் , அங்கஜனுடன் சந்திப்பு

by admin

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனுக்கும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அங்கஜன் இராமநாதனின் மாவட்ட அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது,யாழ்ப்பாண மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் தற்கால பிரச்சனைகள் தொடர்பாக எடுத்துரைத்த அங்கஜன் இராமநாதன் , இந்திய அரசு எமது மக்களுக்கு ஆற்றிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் நாட்டின் வறுமை மிகுந்த மாவட்டங்களில் யாழ் மாவட்டமும் உள்ளடங்கியிருப்பதை சுட்டிக்காட்டி, எமது மாவட்ட மக்களுக்கான தேவைகள் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் மேலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More