Home இலங்கை யாழ் மாவட்ட செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பொறுப்பேற்பு

யாழ் மாவட்ட செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பொறுப்பேற்பு

by admin
யாழ் மாவட்ட செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்றைய தினம் புதன்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை நேற்று முன்தினம் திங்கட்கிழமை அமைச்சரவை  வழங்கியது.
இவருக்கான நியனக் கடிதங்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் தினேஷ் குணவர்தனவால் வழங்கப்பட்டது.  இதனைத்தொடர்ந்து இன்றைய தினம் புதன்கிழமை காலை சர்வமதத் தலைவர்களிடம் ஆசிபெற்ற பின்னர் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
இதற்கு முன் இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி, 2013 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலக செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளராக, மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராக கடமையாற்றி நிறைவாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More