Home இலங்கை காவற்துறை  உத்தியோகத்தரின் மனைவி சடலமாக மீட்பு!

காவற்துறை  உத்தியோகத்தரின் மனைவி சடலமாக மீட்பு!

by admin

வாழைச்சேனை – போத்தாளை பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து காவற்துறை  உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியான ஆசிரியர் உருகுலைந்த நிலையில் இன்று (09.02.23) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்  நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

கல்குடா பிரதான வீதி போத்தாளையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரான 52 வயதுடைய சகுந்தலாதேவி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியரின் கணவர் யாழ். இளவாளை காவல் நிலையத்தில் கடமையாற்றிவருவதுடன், இவரின் மூன்று பிள்ளைகளும் கொழும்பில் வசித்துவரும் நிலையில் ஆசிரியர் தனிமையில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவதினமான இன்று காலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் கிராமசேவகர் காவற்துறையினருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து குறித்த வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கதவு யன்னல்கள் உடைந்துள்ளதுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக ஆசிரியர் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் தடவியல் மற்றும் குற்றதடுப்பு பிரிவின் மேலதிக விசாரணையை மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More