Home இலங்கை போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட வைத்தியர் கைது

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட வைத்தியர் கைது

by admin

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாா்.  பதுளை பிரதேசத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் குறித்த வைத்தியர், தனது காரில்  வைத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக பசறை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து,  அவரது கார் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது காரிலிருந்து  145 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.  பதுளை- மயிலகஸ்தன்னை பகுதியை சேர்ந்த 44 வயதான  வைத்தியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் மிக நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக  தமக்கு   புலனாய்வு  தகவல் கிடைத்ததாக  விசேட அதிரடிப் படையினா்  தெரிவித்தனர்.

சந்தேக நபரும் ம் போதை மாத்திரைகளும் பதுளை  காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு இன்றைய தின  சந்தேக நபரை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக  காவல்துறையினா் தெரிவித்தனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More