Home இலங்கை இலங்கையில் தரையிறங்கிய அமெரிக்க உயர் மட்டக்குழுவினர் யார்? அவர்களின் நோக்கம் என்ன?

இலங்கையில் தரையிறங்கிய அமெரிக்க உயர் மட்டக்குழுவினர் யார்? அவர்களின் நோக்கம் என்ன?

by admin

அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான இரண்டு விசேட விமானங்களில் நேற்று இரவு (14.02.23) கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கைக்குள் பிரவேசித்தவர்கள் இன்று பிற்பகல் (15.02.23) புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

விமானத்தில் சென்றவர்கள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

கிரேக்கத்தின் அமெரிக்க விமானப் படை முகாமொன்றிலிருந்து இரண்டு விசேட விமானங்களும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் ஒரு விமானம் நேற்று மாலை 6.58 மணிக்கு இலங்கைக்கு சென்றதுடன், மற்றைய விமானம் 7.10 மணிக்கு விமான நிலையத்தை அடைந்துள்ளது.

இந்த விமானங்கள் C-17 Globe Masters ரக விமானங்களாகும். இவை யுத்த உபகரணங்களைக் கொண்டு போக்குவரத்து செய்யும் மிகப்பெரிய சரக்கு விமானங்களாகும்.

உயர்மட்ட இராஜதந்திரிகள் உள்ளிட்ட 29 பேர் இந்த இரண்டு விமானங்களிலும் இலங்கை சென்றதாக தெரியவருகிறது.

அமெரிக்காவின் இந்து பசுபிக் பாதுகாப்பு விடயத்திற்கு பொறுப்பான தலைமை பிரதி உதவி பாதுகாப்பு செயலாளர் Jedidiah Royal உள்ளிட்ட பிரதிநிதிகள் இலங்கை சென்றதாக செய்திகள் வௌியாகி உள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More