Home இலங்கை வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு போ் சடலங்களாக மீட்பு

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு போ் சடலங்களாக மீட்பு

by admin

வவுனியா குட்செட்வீதி,உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில்  இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள்  இன்று (07)  காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்ப்படுத்திய போது  அவர் பதிலளிக்காமையினால் அவரது வீட்டிற்கு சென்று  பாா்த்த போது   வீட்டினுள் குடும்பஸ்தர் அவரது மனைவி அவா்களது    இருபிள்ளைகள், ஆகியோர்    உயிாிழந்து காணப்பட்டுள்ளனா்.

சம்பவம் தொடர்பாக வவுனியா  காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதனையடுத்து . சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன்  சடலங்களை சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் வயது42,  வீட்டின் முன்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி வயது36, இரு பிள்ளைகளான கௌ. மைத்ரா (வயது9)  கௌ.கேசரா (வயது3) ஆகியோர் உறங்கிய நிலையில்  சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More