Home இந்தியா ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை

by admin

இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ்  நாடாளுமன்ற உறுப்பினா்  ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாஜக எம்எல்ஏ யுமான புர்னேஷ் மோடி தொடந்த வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

  4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம்  இந்த வழக்கு குறித்து தீர்ப்பளித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது. . இதனிடையே தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடியாக பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More