Home இலங்கை வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவர் பலி

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவர் பலி

by admin

வெல்லவாய, நுகாய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில்  ஒரே குடும்பத்தைச் சோ்ந்த  மூவர் உயிரிழந்துள்ளதுடன்   சிறுவன் ஒருவா்   காயமடைந்துள்ளாா். . வெல்லவாய – தனமல்வில வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று எதிர் திசையில் வந்த கப் ரக  வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரே உயிரிழந்துள்ளதாக  காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.முச்சக்கரவண்டிச் சாரதியான  காவல்துறை உத்தியோகத்தா்    (44 வயது) அவரது மனைவி (42 வயது) மற்றும் அவருடைய தந்தை (70 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முச்சக்கரவண்டியில் பயணித்த 12 வயதான  சிறுவன் படுகாயமடைந்த நிலையில்  மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து தொடர்பில் கப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் அப்போது குடிபோதையில் இருந்ததாக  தெரிவித்துள்ள காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More