Home உலகம் ருவாண்டாவில் வெள்ளப்பெருக்கு – நிலச்சரிவில் சிக்கி 129 பேர் உயிரிழப்பு

ருவாண்டாவில் வெள்ளப்பெருக்கு – நிலச்சரிவில் சிக்கி 129 பேர் உயிரிழப்பு

by admin

 ருவாண்டா நாட்டில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் கனமழை பெய்து வருகின்ற  நிலையில் அங்கு  வெள்ளப்பெருக்கு – நிலச்சரிவில் சிக்கி 129 பேர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.  . குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் இடைவிடாமல் மழை பெய்தமையினால்  பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால்  பல  குடியிருப்புகள், விளை நிலங்கள், வீதிகள்கள் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள்   நடைபெறுகின்ற நிலையில் . மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 129 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. . வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இரவு நேரத்தில் மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது கனமழை பெய்ததால் பல வீடுகள் இடிந்துள்ளன. இதுவே உயிரிழப்பு அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என அதிகாரிகள்  தொிவித்துள்ளனர். வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More