Home உலகம் அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு – 9 போ் பலி

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு – 9 போ் பலி

by admin

அமெரிக்காவில்  டல்லாசுக்கு வடக்கே டெக்சாஸ் ஆலன் நகாில் அமைந்துள்ள   பிரபல வணிக வளாகத்தில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 9 பேர்   உயிாிழந்துள்ளதுடன்   7 பேர் காயமடைந்த நிலையில், அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் துப்பாக்கிதாாியை  காவல்துறையினா்  சுட்டுக் கொன்று விட்டதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.   உள்ளூர் நேரப்படி நேற்று  மாலை   இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து தகவலறிந்து அங்கு சென்ற  காவல்துறையினா்  காயமடைந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, சம்பவ இடத்தில் 7 பேர்  உயிாிழந்திருந்ததுடன்   9 பேர் கு காயமடைந்து உயிருக்கு போராடியக் கொண்டிருந்தனா். காயமடைந்தவா்கள்   மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை யளிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இருவா் உயிாிழந்துள்னா். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தது. மற்ற 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தான் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்ய காவல்துறையினா் முயன்ற போது    அவர் காவல்துறையினரை நோக்கியும் துப்பாக்கியால் சுட முயன்றதனால்  தற்காப்புக்காக காவல்துறையினா் அவரை    சுட்டுக் கொன்றதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More