Home இலங்கை செந்தில் தொண்டமான் இந்திய அமெரிக்க தூதர்களை சந்தித்தார்!

செந்தில் தொண்டமான் இந்திய அமெரிக்க தூதர்களை சந்தித்தார்!

by admin

 

இந்திய உயர்ஸ்தானிகர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பிரதி உயர்ஸ்தானிகர் ஜேக்கப் ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விரிவான கலந்துரையாடலை நேற்று (25.05.23) மேற்கொண்டார்.

கிழக்கு மாகாணத்தின் தற்போதைய இந்திய வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.

கிழக்கில் உள்ள இந்திய நிறுவனங்கள், தனது நலன்புரிக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளை கிழக்கில் உள்ள நலிவடைந்த மக்களுக்கு வழங்க இந்திய தூதரம் உதவி செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

மேலும் Alliance air சேவையை யாழ்ப்பாணத்தில் இருந்து கிழக்கு விமான நிலையங்களுக்கு நீடிக்கவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அத்துடன், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் போன்று கிழக்கிலும் ரயில் பாதையை மேம்படுத்துவதற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கிழக்கில் புதிய வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தூதுவர் ஜூலி சங்  செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று, வியாழக்கிழமை (25.05.23) இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது அமெரிக்க-இலங்கை உறவுகள் மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதற்கும் மாகாணத்தின் பலதரப்பட்ட சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் கலந்துரையாடப்பட்டது என்று ஜூலி சங் டுவிட் செய்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More