Home உலகம் எல் சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதிக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை

எல் சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதிக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை

by admin

 

எல் சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதி  மௌறிச்சோ பியுன்ஸ் ( Mauricio Funes )  மற்றும் அவரது நீதி அமைச்சர் ஆகியோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி குழுக்களுடன் தொடர்புகளை பேணியமை மற்றும் கடமைகளிலிருந்து விலகியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக அவர்களுக்கு  இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைவாக முன்னாள் ஜனாதிபதி மௌறிச்சோ பியுன்ஸிற்கு 14 ஆண்டுகளும் முன்னாள் நீதி அமைச்சருக்கு   18 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக  தொிவிக்கப்பட்டுள்ளது

2009 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் இருந்த  மௌறிச்சோ பியுன்ஸ் தேர்தல் இலாபத்திற்காக திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினர்களுடன் தொடர்புகளை பேணியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை , முன்னாள் ஜனாதிபதி மௌறிச்சோ பியுன்ஸ்  தற்போது நிகரகுவாவில் வசித்து வருவதுடன் 2019 ஆம் ஆண்டு அவருக்கு அந்நாட்டு பிரஜாவுரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

நிகரகுவா பிரஜையொருவர் வௌிநாடொன்றில் குற்றவாளியாக காணப்பட்டாலும் அவரை அந்நாட்டிடம் ஒப்படைக்காமலிருப்பதற்கான சட்டதிட்டங்களே நிகரகுவாவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More