Home இந்தியா 5வது முறையாக கிண்ணத்தினைக் கைப்பற்றிய சென்னை

5வது முறையாக கிண்ணத்தினைக் கைப்பற்றிய சென்னை

by admin

நேற்றையதினம்  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிாிக்கெட்டின்  இறுதிப்போட்டியில்  குஜராத் டைட்டன்ஸ் அணியினை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  5வது முறையாக கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது.

நாணயச் சுழற்சியில் வென்ற சென்னை சுப்பா் கிங்ஸ் .  முதலில் ப களத்தடுப்பினை தொிவு செய்த நிலையில்    முதலில்  துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி  20 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 214 ஓட்டங்களை குவித்தது..

இதனையடுத்து 215 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாட சென்னை அணி களமிறங்கிய போது மழை குறுக்கிட்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ருதுராஜ் 3 பந்துகளில் 4 ஓட்டங்களை எடுத்த நிலையில், மழை திடீரென குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், மழை நின்றதை அடுத்து நள்ளிரவு 12.10 அளவில் மீண்டும்   போட்டி ஆரம்பிக்கப்பட்டு  சென்னை அணிக்கு 15 ஓவர்களில் 171 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

முதலில் களமிறங்கிய ருதுராஜ் 26 ஓட்டங்களுடனும் கொன்வே 47 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த ரஹானே 27 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததுடன், அம்பத்தி ராயுடு 19 ஓட்டங்களை எடுத்தார்.ராயுடு ஆட்டமிழந்ததை அடுத்து, களமிறங்கிய அணித்தலைவர் டோனி   12.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் தோனி ஓட்டமேதும் எடுக்காது வௌியேறினார்.

அடுத்து களமிறங்கிய ஷிவம் தூபே மற்றும் ஜடேஜா ஜோடி நிதானமாக துடுப்பெடுத்தாடியது. கடைசி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவைப்பட இருவரும் நிதானமாக துடுப்பெடுத்தாடினர். இறுதி இரு பந்துகளில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஐந்தாவது பந்தில் ஜடேஜா சிக்ஸர் ஒன்றை அடித்தாா்.

இதந்தநிலையில்    15 ஓவர்களின்  முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171  ஓட்டங்களை  எடுத்து சென்னை அணி  வெற்றி பெற்று .   5வது முறையாக  கிண்ணத்தினைக் கைப்பற்றியது

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More