Home இலங்கை அரச சட்டமூலங்களை ஆராய எதிர்க்கட்சியினால் குழுவொன்று நியமனம்!

அரச சட்டமூலங்களை ஆராய எதிர்க்கட்சியினால் குழுவொன்று நியமனம்!

by admin

ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலம் உள்ளிட்ட அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள சட்டமூலங்களை ஆராய எதிர்க்கட்சியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலத்தை ஆராய பேராசிரியர் சரித்த ஹேரத் தலைமையில் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அதன் ஏனைய உறுப்பினர்களாக இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், கயந்த கருணாதிலக்க, ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சட்டமூலம் தொடர்பில் ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை இந்த குழு சேகரிக்க ஆரம்பித்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்ததன் பின்னர், ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலம் தொடர்பான எதிர்க்கட்சி கூட்டணியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் குறித்து ஆராய்வதற்காக பேராசிரியர் G.L.பீரிஸ் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி சட்டமூலத்தை ஆராய்ந்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக எரான் விக்ரமரத்ன தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More