Home இலங்கை கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள வாவியிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள வாவியிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

by admin

 

மட்டக்களப்பு – கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள வாவியிலிருந்து  நேற்று(31) மாலை யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.   குறித்த யுவதியின் சடலம் கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள வாவியில் கரையொதுங்கியதைக்  அவதானித்த  பொதுமக்கள்  காவல்துறையினருக்கு   வழங்கிய தகவலினையடுத்து  சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – பண்டிங்ஸ் வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு   காவல்துறையினா் தொிவித்துள்ளனா். நேற்று ) நண்பகல் வேளையில் வீட்டிலிருந்து துவிச்சக்கரவண்டியில்  வெளியே சென்றிருந்த  யுவதி  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கு அமைவாக மண்டூர் திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை நேரில் சென்று பார்வையிட்டதுடன்  சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறும் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும்  உத்தரவிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More