Home உலகம் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு கோாிக்கை

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு கோாிக்கை

by admin

 

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்  என  தென் ஆபிரிக்க   ஜனாதிபதி  சிரில் ரமபோசா  ரஸ்ய  ஜனாதிபதி புட்டினிடம் கோாிக்கை விடுத்துள்ளாா். உக்ரைன் மற்றும் ரஸ்யாவுக்டையேயான போர் 1½ ஆண்டாக நீடித்து கொண்டிருக்கிறது.

இப்போரை முடிவுக்கு கொண்டுவர ஆப்ரிக்க அமைதி இயக்கம் என்ற பெயரில் தென் ஆபிரிக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தென் ஆபிரிக்கா, எகிப்து, செனகல், கொங்கோ-பிராசாவில்லி, கொமுமா ரோஸ், ஜாம்பியா, உகாண்டா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளை கொண்ட ஆபிரிக்க குழு, தென் ஆபிரிக்க  ஜனாதிபதி சிரில் ராமபோசா தலைமையில்  உக்ரைன் சென்று அந்நாட்டு  ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

இதனையடுத்து  ரஸ்யாவுக்கு சென்ற குறித்த  ஆபிரிக்க குழுவினர்  செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு சென்ற நிலையில்  தென் ஆபிரிக்க ஜனாதிபதி  சிரிஸ் ரமபோசா, அங்கு ரஸ்ய ஜனாதிபதி புட்டினை சந்தித்து பேசியுள்ளார்.

இதன்போது புட்டினிடம் சிரில் ராமபோசா  , ‘போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அது தொடர்பாக அவர் கூறும்போது, ‘போரை என்றென்றும் தொடர முடியாது. அனைத்து போர்களும் தீர்க்கப்பட்டு ஒரு கட்டத்தில் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று மிகத் தெளிவாக செய்தியை தெரிவிக்க இங்கு வந்துள்ளோம்.

இந்த போரால் ஆபிரிக்க கண்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளும் பாதிப்பு அடைந்துள்ளன. போரால் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்  ‘  எனத் தொிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த புட்டின்  ‘உக்ரைன் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு மறுத்து வருகிறது. குழந்தைகள் புனிதமானவர்கள். அவர்களை மோதல் மண்டலத்திலிருந்து வெளியேற்றினோம். அவர்களின் உயிரையும், ஆரோக்கியத்தையும் காப்பாற்றியுள்ளோம் எனத் தொிவித்துள்ளாா்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More