Home இலங்கை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொகுசு விடுதி அமைக்க காணி வழங்கப்படவுள்ளது!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொகுசு விடுதி அமைக்க காணி வழங்கப்படவுள்ளது!

by admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் கெப்பிட்டல் இன்வெஸ்ட்மென்ட் எல்எல்சி நிறுவனத்துக்கு சொகுசு ஹோட்டல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீண்ட கால குத்தகை அடிப்படையில் காணி வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளது.

தற்போது இலங்கை மின்சார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தை அண்டிய ஒரு காணி மற்றும் நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ள சிறிய தீவு ஆகியவை, 25 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில்,  முழு வெளிநாட்டு முதலீட்டுடன் சொகுசு விடுதி  வளாகத்தை நிர்மாணித்து பராமரிக்கும் திட்டத்துக்காக வழங்கப்படவுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் கப்பிடல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் நேரடி முதலீடு, அடிப்படையில் குறித்த காணியை கையகப்படுத்துவதற்கான திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த நிறுவனத்துக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் காணிகளை வழங்குவதற்காக, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More