Home இலக்கியம் அழகான உலகில் மகிழ்வான வாழ்விற்கான பாடல்! – சி.ஜெயசங்கர் –

அழகான உலகில் மகிழ்வான வாழ்விற்கான பாடல்! – சி.ஜெயசங்கர் –

இயல்பான இயற்கையில் வாழ்ந்து மகிழுவோம்!

by admin

அழகான உலகில் மகிழ்வான வாழ்விற்கான பாடல்

உலகமெல்லாம் கொள்ளை அழகு
குவிந்து கிடக்குது
உள்ளம் உவகை கொள்ளும் வனப்பு
மிகுந்து கிடக்குது

அள்ள அள்ளக் குறையாத
வளங்கள் இருக்கிது
அனைத்துயிரும் வாழ்ந்து மகிழ
வழிகள் இருக்கிது

அதை நடத்தி முடிக்கும் அறிவு ஆற்றல்
நிறைந்து கிடக்கிது
அதற்குத் தடைகள் எங்கெங்கும்
மலிந்து கிடக்கிது

நிலைமை விளங்கும் அறிவு எங்கும்
ஒளிகொள்ள வேண்டும்
உண்மை மறைக்கும் திரைகள் எல்லாம்
விலக்கிட வேண்டும்

உயர்வு தாழ்வு அற்ற உலகம்
இருந்திட வேண்டும்
உலக உயிர்கள் எல்லாம் நல்லாய்
வாழ்ந்திட வேண்டும்

  • சி.ஜெயசங்கர் –

இயல்பான இயற்கையில் வாழ்ந்து மகிழுவோம்

இயல்பாக இயற்கையை வாழவிடுவோம் – அது
அள்ளித்தரும் வளங்களில் வாழ்ந்து மகிழுவோம்

மற்றெல்லா உயிர்களிலும் மேலானவர்கள் – மனிதர்
என்ற அறிவு பொருத்தமில்லை ஏற்றுக்கொள்ளுவோம்

சிறுபூண்டும் பெருமரமும் உணவு அறிகுவோம்
நோய்நீங்கி வாழ அவை மருந்தும் ஆகுமே

சிற்றெறும்பு தொல்லையென்று துணுக்குறுகின்றோம் – அது
இல்லையென்றால் மனிதர்களும் இல்லை அறிகுவோம்

எவ்வுயிரும் உலகம் வாழ தேவை அறிகுவோம்
மனிதர் மட்டும் வாழும் உலகம் மரணம் ஆகுமே

உயிரைக் கொல்லும் நச்சு அறிவை உயர்த்திப் பிடிக்கின்றோம்
உலகம் வாழும் இயற்கை அறிவைப் போட்டு மிதிக்கின்றோம்

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் கதையிதுதானோ
காசை மட்டும் கருத்தில் கொண்ட வாழ்வு போதுமோ

இயல்பாக இயற்கையை வாழவிடுவோம் – அது
அள்ளித்தரும் வளங்களில் வாழ்ந்து மகிழுவோம்.

சி.ஜெயசங்கர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More