Home இலங்கை “13 ஆவது திருத்தின் அதிகாரப் பரவலாக்களை நடைமுறைப்படுத்துவோம்”

“13 ஆவது திருத்தின் அதிகாரப் பரவலாக்களை நடைமுறைப்படுத்துவோம்”

by admin

பலரும் பேசிக் கொண்டிருக்கும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இன்றும் நாளையும் ஒரே நிலைப்பாட்டையே நாம் கொண்டிருப்பதாகவும், ஒன்றித்த நாட்டுக்குள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரப் பரவலாக்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேண தேசிய ஒற்றுமை மிகவும் அவசியம் என்றும், நாட்டின் அனைத்து பிரஜைகளும் சமமாக கருதப்பட்டு ஒவ்வொரு சமூகத்திற்கும் சுயமரியாதையுடன் வாழும் உரிமை வழங்கப்பட வேண்டுமெனவும், இன்று இவை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மகா சங்கத்தினரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சிறந்த முறையில் பெற்றுக்கொண்டு பாதகமான காரணிகளை நீக்கி சாதகமான காரணிகளுடன் சமய சேவை, சமூக சேவை மற்றும் முற்போக்கு அரசியல் பயணத்தை முன்னெடுக்கும் சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி திகழ்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

விழுமியமிக்க சமூகத்துக்கான பிக்குகள் ஆலோசனை பேரவையின் இரண்டாம் கட்டம் நேற்று (15.08.23) காலி மாவட்டத்தை இலக்காக் கொண்டு காலி நகரசபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த கால ஆட்சியாளர்களின் பணியாற்றுகைகளைப் பார்த்து ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்தை மதிப்பிட வேண்டாம் என மதிப்புக்குரிய மகாசங்கத்தினரிடம் பணிவுடன் கேட்டுக்கொள்வதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தசராஜ தர்ம கொள்கைகளை மையப்படுத்தி அரசை நிர்வகிப்பதாகவும் அவர் கூட்டிக்காட்டியுள்ளார்.

ஒன்றித்த நாட்டுக்குள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரப் பரவலாக்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேண தேசிய ஒற்றைமை மிகவும் அவசியம் என்றும்,நாட்டின் அனைத்து பிரஜைகளும் சமமாக கருதப்பட்டு ஒவ்வொரு சமூகத்திற்கும் சுயமரியாதையுடன் வாழும் உரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள விசேட இடம் எப்போதும் பாதுகாக்கப்படும் எனவும், ஏனைய மதங்களும் சமயங்களும் பாதுகாப்பாக இருக்க செயற்பட வேண்டும் எனவும், நாட்டில் பிளவு ஏற்பட்டால், நாட்டின் தேசிய பாதுகாப்பு பற்றி பேசுவதில் அர்த்தமில்லை என்றும், அந்தப் பிரிவினையை இல்லாதொழிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக அனைத்து மக்கள் சமூகங்களும் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்றும், அந்த இலக்கை நோக்கி ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் செயற்படும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

புத்தசாசன அமைச்சும் புத்தசாசன நிதியமும் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் நிறுவப்பட்டது என்றும், சகோதர ஏனைய மதங்களை பாதுகாப்பதற்காக தனியான அமைச்சுகளை அவர் நிறுவியதையும் நினைவுகூர்ந்தார்.

 

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More