மன்னார் – தலைமன்னார் பிராதன வீதியில் பயணித்த இரு வாகனங்கள் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் இன்றுதிங்கள் (21) மாலை மன்னார் – தலைமன்னார் பிராதன வீதியில் தலைமன்னார் காவல்துறை பிரிவான பருத்திப் பண்ணையில் இடம் பெற்றுள்ளது. தலை மன்னார் ஊர்மனையைச் சேர்ந்த இரண்டு மாதக் குழந்தையின் தந்தையான லோறன்ஸ் மனோகரன் நிசாந்தன் (வயது- 32) என்பவரே விபத்துக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தனது மோட்டர் சைக்கிளில் தலைமன்னார் ஊர் மனைக்கு பயணித்துக் கொண்டிருந்த போது வெளி மாவட்டத்திலிருந்து சுற்றுலா வந்த ஹயஸ் ரக வாகனம் மோதி இவ் விபத்து இடம் பெற்றுள்ளள்ளது.
இறந்தவரின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு உடற் கூற்று பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும் விபத்துக்கு உள்ளான மோட்டார் சைக்கிள்மீது மோதுண்ட வாகனம் தலைமன்னார் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக தலைமன்னார் காவல்துறையினர் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2023/08/IMG-20230821-WA0121.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2023/08/IMG-20230821-WA0123.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2023/08/IMG-20230821-WA0120.jpg)