Home இலங்கை யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய தேர் திருவிழா!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய தேர் திருவிழா!

by admin

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.

தேர்த் திருவிழாவுக்கான கிரியைகள் அதிகாலை ஆரம்பமாகி காலை-7.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை ஆரம்பமானது.

வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து துர்க்கையம்மன் காலை 09 மணியளவில் சித்திரத் தேரில் எழுந்தருளினார்.

இதன்போது பலரும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் பொருட்டு விசேட வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

துர்க்கா புஷ்கரணி தீர்த்தக் கேணியில் நாளை காலை செவ்வாய்க்கிழமை காலை தீர்த்தோற்சவமும், மாலை கொடியிறக்க உற்சவமும் நடைபெறவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More