Home இலங்கை யாழில். போதைப்பொருள் கடத்தலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட கப் வாகனத்துடன் ஐவர் கைது

யாழில். போதைப்பொருள் கடத்தலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட கப் வாகனத்துடன் ஐவர் கைது

by admin

 

போதைப்பொருள் கடத்தலுக்காக பிரத்தியோகமாக மாற்றி அமைக்கப்பட்ட கப் ரக வாகனத்துடனும் , ஒன்றரை கோடி ரூபாய் பணத்துடனும் ஐந்து சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மற்றும் நேற்றைய தினம் புதன்கிழமை ஆகிய இரு தினங்களும் , கடற்படையினர் ,  காவல்துறை விசேட அதிரடி படையினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து கூட்டு தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
அதன் போது , சந்தேகத்திற்கு இடமான கப் ரக வாகனம் ஒன்றினை சோதனையிட்ட போது , அந்த வாகனத்தின் பெட்டியின் கீழ் மேலுமொரு பெட்டி அடிக்கப்பட்டு , போதைப்பொருள் கடத்தலுக்கு ஏதுவாக வாகனத்தை மாற்றி அமைக்கப்பட்டு இருந்தமையை கண்டறிந்துள்ளனர்.
அதனை அடுத்து வாகனத்தில் பயணித்த இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் உரும்பிராய் , மாதகல்  மற்றும் ஊவா மாகாணம் ,  குடா ஓயா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் , அவர்களிடம் இருந்து கப் ரக வாகனம் , மோட்டார் சைக்கிள் மற்றும் 15 மில்லியன் ரூபாய் பணம் என்பன மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களும் , மீட்கப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்  கடற்படை தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More