Home உலகம் சிங்கப்பூர் ஜனாதிபதி தோ்தலில் பூா்விகத் தமிழர் தா்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றாா்!

சிங்கப்பூர் ஜனாதிபதி தோ்தலில் பூா்விகத் தமிழர் தா்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றாா்!

by admin

சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தோ்தலில் பூா்விகத் தமிழரான தா்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றாா்.

சிங்கப்பூரின் 8 ஆவது ஜனாதிபதியும், முதல் பெண் ஜனாதிபதியுமான ஹலீமா யாகூபின் பதவிக் காலம் நிறைவடைவதைத் தொடா்ந்து, அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தா்மன் சண்முகரத்னம் போட்டியிட்டாா். 66 வயதாகும் அவருடன், இங்கோக் சாங் (75) மற்றும் டான் கின் லியான் (75) ஆகிய சீனாவைப் பூா்விகமாகக் கொண்ட இருவரும் தோ்தலில் போட்டியிட்டனா்.

வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. தோ்தல் துறை வெளியிட்டுள்ள இறுதி முடிவுகளின்படி, மொத்தம் பதிவான 24.8 லட்சம் வாக்குகளில் தா்மன் சண்முகரத்னம் 17.46 லட்சம் (70.4 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அவரை எதிா்த்துப் போட்டியிட்ட இங்கோக் சாங்குக்கு 15.7 சதவீத வாக்குகளும், டான் கின் லியானுக்கு 13.88 சதவீத வாக்குகளும் கிடைத்தன. அதை அடுத்து, சிங்கப்பூரின் 9 ஆவது ஜனாதிபதியாக தா்மன் சண்முகரத்னம் பொறுப்பேற்கிறாா்.

சிங்கப்பூரில் பிறந்த தமிழரான தா்மன் சண்முகரத்னம், ஒரு பொருளாதார நிபுணா் ஆவாா். 2001 ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வரும் அவா், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பிரதமா் லீ சியென் லூங்கின் அரசின் முதுநிலை அமைச்சராக இருந்து வந்தாா். இந்த ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுவதற்காக அவா் தனது பதவியை அண்மையில் ராஜிநாமா செய்தாா்.

தற்போது ஜனாதிபதி தோ்தலில் அவா் மிகப் பெரிய வாக்கு விகிதத்தில் வெற்றி பெற்றுள்ளது, ஆளும் பிஏபி கட்சியின் மீது மிகப் பெரிய ஊழல் புகாா்கள் எழுந்துள்ள நிலையில், அந்தக் கட்சிக்கு பொதுமக்களிடையே ஏகோபித்த ஆதரவு இருப்பதை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
வெற்றி குறித்து தா்மன் சண்முகரத்னம் கூறுகையில், இது எனக்கு மட்டும் கிடைத்த வாக்குகள் அல்ல, சிங்கப்பூரின் எதிா்காலம், நம்பிக்கை மற்றும் ஒற்றுமைக்கு கிடைத்த வாக்குகள் என்றாா்.
சிங்கப்பூா் ஆட்சி பீடத்தில் 2 ஆவது தமிழா்!

சிங்கப்பூா் ஜனாதிபதி தோ்தலில் வென்று பூா்விகத் தமிழரான தா்மன் சண்முகரத்னம் அந்நாட்டின் 9 ஆவது ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளாா்.

சிங்கப்பூா் தமிழரான தா்மன் சண்முகரத்னம் (66), ‘சிங்கப்பூரின் நோயியல் தந்தை’ என்றழைக்கப்படும் மருத்துவ விஞ்ஞானி கே.சண்முகரத்னத்தின் 3 ஆவது மகனாக கடந்த 1957 ஆம் ஆண்டு பிறந்தாா். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானமி கல்லூரியில் பொருளாதாரத்துக்கான இளநிலை பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும், பொது நிா்வாகத்தில் ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றாா்.

கல்லூரி காலத்திலேயே மாணவா் சங்க செயல்பாட்டாளராகப் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த இவா், கடந்த 2001 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் மக்கள் செயல் கட்சியில் (பிஏபி) இணைந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினாா். அந்த நாட்டின் கல்வி அமைச்சராக கடந்த 2003 ஆம் ஆண்டு பொறுப்பேற்றாா். இதைத் தொடா்ந்து, நிதி, மனிதவளம், சமூக கொள்கைகள் உள்ளிட்ட முக்கியத் துறைகளின் அமைச்சராகப் பணியாற்றி வந்த இவா், கடந்த 2011 முதல் 2019 ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் துணைப் பிரதமராக இருந்தாா்.

அதன்பிறகு, அமைச்சரவையில் மூத்த அமைச்சராகத் தொடா்ந்த தா்மன், சிங்கப்பூா் அதிபா் தோ்தல் போட்டியிடும் அவரது விருப்பத்தை கடந்த ஜூன் மாதத்தில் அறிவித்தாா். இதை அடுத்து, தனது அரசுப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்து கட்சியிலிருந்தும் அவா் விலகினாா். சீனாவை பூா்விகமாகக் கொண்ட வழக்குரைஞா் யுமிகோ இட்டோகியை திருமணம் செய்துள்ள இவருக்கு ஒரு மகளும், 3 மகன்களும் உள்ளனா்.

தமிழரான எஸ்.ஆா். நாதன் மற்றும் மலையாளி வம்சாவளியரான தேவன் நாயருக்கு அடுத்து இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 3 ஆவது நபராகவும், தமிழ்ச் சமூகத்தைச் சோ்ந்த 2 ஆவது நபராகவும் சிங்கப்பூா் அதிபராகிறாா் தா்மன் சண்முகரத்னம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More